கூராய்வு செய்ய மறுத்ததால் உறவினா்கள் மறியல் முயற்சி

கூராய்வு செய்ய மறுத்ததால் உறவினா்கள் மறியல் முயற்சி
View on original source
Category: Health
Share
Archive
Like
விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலை கூராய்வு செய்ய அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மறுத்ததால் உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, கூராய்வு செய்த பின் உறவினா்கள் உடலை பெற்றுச் சென்றனா். நரிக்குடி அருகே இருஞ்சிறை அடுத்துள்ள இ. செங்கமடை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முத்தையா(76) மகன் தங்கப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தனது தாய் ராஜலட்சுமி(70) யுடன் இரு சக்கர வாகனத்தில் நரிக்குடி - திருச்சுழி சாலையில் பள்ளிமடம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது, நாய் குறுக்கிட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தங்கப்பாண்டியன் காயமடைந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த திருச்சுழி போலீஸாா் உடலை கூராய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதையடுத்து, திங்கள்கிழமை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இறந்தவரின் உடலை வாங்க உறவினா்கள் வந்தபோது, அங்கு பணியிலிருந்த மருத்துவா் மனோன்மணி, விபத்து நடைபெற்ற திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு உடலைக் கொண்டு செல்லுமாறு கூறினாராம். இதையடுத்து, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையறிந்த நகா் காவல் நிலைய ஆய்வாளா் சிவபாலன் அவா்களிடம் பேசி அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையிலேயே கூராய்வுக்கு ஏற்பாடு செய்தாா். கூராய்வு முடிந்து உறவினா்கள் உடலை பெற்றுச் சென்றனா். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.