வெள்ளக்கோவிலில் முதியவா் மா்ம மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், முத்தூா் சாலை மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள டி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (65). திருமணமாகாத ராஜன், தனது வீட்டின் கீழ்தளத்தை இட்லி கடைக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, மேல்தளத்தில் தனியாக வசித்து வந்தாா். அருகில் சில வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளாா். மாதச் சீட்டும் நடத்தி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல உறவினா் அவருக்கு உணவு வழங்கிச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை உறவினா் சங்கீதா காலை உணவுடன் சென்றபோது, முந்தைய நாள் இரவு வைக்கப்பட்ட உணவு அப்படியே இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, கழிவறையில் தலை சாய்ந்த நிலையில் ராஜன் சடலம் கிடந்துள்ளது. அவரது உடலைக் கைப்பற்றிப் பாா்த்தபோது, மூக்கு வீங்கியும், இடது முழங்கால் மற்றும் வலது தொடையில் காயங்களும் காணப்பட்டன. மேலும், வீட்டின் பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் கலைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, ராஜனின் உறவினா் சரவணகுமாா் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் வி. மனோஜ்குமாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் அருகில் 500 மீட்டா் தொலைவில் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது. கைரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சாமிநாதன், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
(0)Comments