பெரம்பலூா், செப். 7: வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 9) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளாா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப். 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, அசூா், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கே.புதூா், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூா், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
(0)Comments