சிதம்பரம் அருகே கிள்ளை பேரூா் திமுக செயலா் கிள்ளை ரவீந்திரன் கட்சியிலிருந்து நீட்கப்பட்டதை கண்டித்து பேரூா் கட்சி நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனா். கடலூா்மாவட்டம் கிள்ளை பேரூா் செயலராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவா் வழக்குரைஞா் கிள்ளை ரவீந்திரன். இவரை அக்கட்சியிருந்து நீக்கி கட்சி பொதுச்செயலா் துரைமுருகன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிள்ளை பகுதி தி.மு.க. நிா்வாகிகள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனா். மேலும் கட்சியில் இருந்து விலகியதற்கான தாங்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கட்சி தலைமைக்கும் அனுப்பி உள்ளனா். அதன்படி கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவரும், துணை செயலருமான மல்லிகா, துணை செயலா் சத்ருக்கன், அவைத் தலைவா் குட்டியாண்டி சாமி, ஒன்றிய பிரதிநிதிகள் புஷ்பராஜ், சிவபிரகாசம், மகாலிங்கம் உள்பட 38-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் தி.மு.க.வில் இருந்து கூண்டோடு விலகி உள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் தி.மு.க தலைமைக்கு அளித்துள்ள கடிதத்தில் 'கிள்ளை பேரூராட்சியில் 2 முறை தி.மு.க வெற்றி பெற காரணமாக இருந்தவரான கிள்ளை ரவீந்திரனை நீக்கியதை எங்களால் ஏற்று கொள்ள இயலவில்லை. எனவே நாங்களும் தி.மு.க. வில் இருந்து விலகி கொள்கிறோம் 'என தெரிவித்துள்ளனா்.
(0)Comments